இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பறிமுதல்
கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி கரையோரப் பகுதியில் இந்தியாவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று(05.04.2024) புத்தளம் (Puttalam) பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் புத்தளம் கலால்வரித் திணைக்களத்தினருடன் இணைந்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதன்போது சுமார் 40 உறைகளில் 1200 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாகவும் இதன்போது எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியெனவும், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் புத்தளம் கலால்வரித் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் கலால்வரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri