மட்டக்களப்பில் வாகன விபத்து: வயோதிபர் படுகாயம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டவன் வெளிப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவமானது இன்று (04.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இவ்வாறு காயமடைந்த வயோதிபர் பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவை நோக்கிச் சென்ற சிறிய ரக லொறியொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் லொறியின் அதிவேகம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam