மட்டக்களப்பில் இரண்டாம் கட்ட கோவிட் தடுப்சியை மூன்று நாட்களில் 2000 பேர் ஏற்றியுள்ளனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் 2000 பேர் தடுப்பூசியினை ஏற்றிக்கொண்டுள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமான முறையில் இடம்பெற்று வருகின்றன.
மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்தியதிகாரி பணிமனை
ஊழியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட
சுகாதாரத்துறை சார்ந்தோர் இவ்வாறு தடுப்பூசியினை ஏற்றிக்கொண்டனர் எனத் தெரிவித்துள்ளார்.