மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையில் ஈடுபடும் இராணுவத்தினர்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் மறு அறிவித்தல் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அவசர கிகிட்சைப்பிரிவு சேவைகளுக்கான கடமைகளில் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில், வெளிநோயாளர்களுக்கான மருந்தக உத்தியோகத்தர்களும் கடமையை பகிஷ்கரித்துள்ளதுடன் மருந்தகமும் மூடப்பட்டுள்ளது.
நேற்றையதினமும் வைத்தியசாலை ஊழியர்கள் முதற்கட்டமாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர் மற்றும் செங்கலடி வைத்தியசாலைகள்
மட்டக்களப்பு - ஏறாவூர் மற்றும் செங்கலடி வைத்தியசாலைகளுக்கு இன்று சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் வைத்திய சேவை ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் 2வது நாள் பணிப்பகிஸ்கரிப்பினால் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனர்.
இன்று இரண்டாவது நாளாகவும் மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கையினால் நோயாளிகள் வைத்திய சேவையைப் பெற பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் இன்று வைத்தியர்கள் மாத்திரம் கடமைக்கு வருகை தந்திருந்தனர். OPD வெளி நோயாளர் பிரிவு பகுதியில் பல மணித்தியாளமாக நோயாளிகள் காத்திருந்ததுடன், சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன் மருந்து வழங்கும் பிரிவு முற்றாக இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடு பூராகவும் நடைபெற்று வரும் வைத்திய சேவை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பால் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்கள் திரும்பிச் செல்லும் அவல நிலை காணப்படுகிறது.
செய்தி - நிலாந்தன்

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri
