மட்டக்களப்பில் மண் மாபியாக்களின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள்

Batticaloa Sri Lanka Sri Lanka Police Investigation
By Independent Writer Feb 20, 2024 01:37 PM GMT
Independent Writer

Independent Writer

in குற்றம்
Report

 மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி குழு தீர்மானங்களை மீறி சிங்கள பெரும்பான்மை மண் மாபியாக்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் செயற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் மண் அனுமதி பத்திர உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது குறித்து உள்ளூர் மண் அனுமதி பத்திர உரிமையாளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளனர்.

ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி செங்கலடி பிரதேச செயலாளர் மண் அனுமதி பத்திரம் வழங்குவதற்கு சிபாரிசு செய்துள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு

மண் அனுமதி பத்திரம்

இவ்வாறு பிரதேச செயலாளர் கையொப்பம் இட்டு புவிச்சரிதவியல் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ள பெயர் விபரங்களை நாங்கள் பெற்றுள்ளோம்.

குறித்த பெயர்களில் அதிகமான பெயர்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கே அதிக மண் அனுமதி பத்திரம் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மண் மாபியாக்களின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் | Batticaloa Soil Mafia Nformation Revealed

புவிச்சரிதவியல் திணைக்களத்திற்கு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களின் படி 13 பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கிரவல், ஆற்று மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குமாறு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் மண் அனுமதி பத்திர உரிமையாளர்கள்

இதன்படி 95 வீதம் தமிழ் பேசும் மக்கள் உள்ள மாவட்டத்தில் ஏற்கனவே உள்ளூரில் மண் அனுமதி பத்திரம் உள்ளவர்களுக்கு தங்களது மண் அனுமதி பத்திரத்தை புதுப்பிக்காது வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன முதலாளிகளுக்கும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கும் மண் அனுமதி பத்திரம் வழங்குவதாக கோரி இராஜாங்க அமைச்சரிடம் மட்டக்களப்பு மாவட்ட கனிப் பொருள் அனுமதி பத்திர உரிமைகள் சங்கம் முறையிட்டிருந்தனர்.

மட்டக்களப்பில் மண் மாபியாக்களின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் | Batticaloa Soil Mafia Nformation Revealed

ஏற்கனவே செங்கலடி பிரதேச அபிவிருத்தி குழு தீர்மானத்தின் ஊடாக ஆற்றுமணல் அகழ்வு மற்றும் கிரவல் அனுமதிக்கு தடை விதித்திருந்த நிலையில் புதிய அனுமதிப் பத்திரங்களை வழங்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஆனால் மேற்படி தீர்மானங்களை எல்லாம் புறக்கணித்து செங்கலடி பிரதேச செயலாளரினால் புவிச்சரிதவியல் திணைக்களத்திற்கு மேற்படி பெயர் பட்டியல் அனுப்பபட்ட நிலையில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி அனுப்பபட்ட சிபாரிசுகளை நிறுத்துமாறு இராஜாங்க அமைச்சர் அரசாங்க அதிபருக்கு அறிவித்ததன் அடிப்படையில் குறித்த பெயர் பட்டியலை நிறுத்தி வைக்குமாறு அரசாங்க அதிபர் புவிச்சரிதவியல் திணைக்களத்திற்கு வேண்டுகோள் விடுத்ததன் பிரகாரம் அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சருக்கு எதிரான உண்ணாவிரதம்

இந்நிலையில், மேற்படி பிரதேச செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட பெயர் பட்டியலை இடைநிறுத்தியதன் காரணமாகவே இராஜாங்க அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அவருக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பில் மண் மாபியாக்களின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் | Batticaloa Soil Mafia Nformation Revealed

தான் அனுப்பி வைத்த பெயர் பட்டியலுக்கு இராஜாங்க அமைச்சரினால் தடை ஏற்படுத்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக வீதியில் மண், கிரவல் அனுமதி பத்திரம் கோரியும், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பறிக்க கோரியும் நேற்று ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை குளிர்பானம் கொடுத்து நிறைவு செய்ததோடு இராஜாங்க அமைச்சரின் தலையீடு இன்றி மண் அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி வழங்கி உள்ளார்.

அபிவிருத்தி குழு கூட்டம் எதற்காக?

மாவட்ட அபிவிருத்தி குறித்தும் மக்கள் பிரச்சினைகள் குறித்தும் தீர்மானிப்பதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அபிவிருத்தி குழு கூட்டத் தீர்மானங்கள், அதற்காக நியமிக்கப்பட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த தீர்மானங்களை மதிக்காது மண் மாபியாக்களுக்கு பயந்து தன்னிச்சையாக மண் அனுமதி பத்திரம் வழங்குவதற்கு பிரதேச செயலாளர் முடிவு செய்தது எப்படி? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மண் மாபியாக்களின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் | Batticaloa Soil Mafia Nformation Revealed

மேலும், கடந்த காலங்களில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 1350 மண் அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அளவுக்கு அதிகமான மண் அனுமதி பத்திரத்தை வழங்குவதற்கு காரணம் அரச அதிகாரிகளே.

இதனால் எமது மாவட்ட மண் வளம் அழிக்கப்படுகிறது, விவசாய நிலங்கள், குளங்கள், குளக்கட்டுக்கள், பாதிக்கப்படுகிறது. ஆற்று மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள் ஆனால் இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காது கட்டாயம் ஆற்று மணல் அகழ்வு, கிரவல், கல்குவாரி அனுமதி பத்திரம் போன்றவற்றை வெளி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு அவசர அவசரமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பில் மண் மாபியாக்களின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் | Batticaloa Soil Mafia Nformation Revealed

கடந்த காலங்களில் கொழும்பில் இருந்து வந்த பெரும்பான்மை இன மண் மாபியாக்களால் மட்டக்களப்பு மாவட்ட வயல் நிலங்கள் தொடங்கி குளங்கள், வீதிகள் , என அனைத்தும் அழிக்கப்பட்டு இதுவரை சீர் செய்யாத நிலையில் இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் அது குறித்து கவனம் செலுத்தாது மீண்டும் மீண்டும் மண் அனுமதி பத்திரம் வழங்குவதன் நோக்கம் என்ன? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தமிழர் பகுதில் இரகசியமாக கட்டப்படும் விகாரை: சாணக்கியன் சீற்றம்

தமிழர் பகுதில் இரகசியமாக கட்டப்படும் விகாரை: சாணக்கியன் சீற்றம்

நாட்டில் பணவீக்கம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

நாட்டில் பணவீக்கம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US