மட்டக்களப்பு மாவட்ட பிரதான உலக சுற்றாடல் தின நிகழ்வு
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு 'சூழலை மாசுபடுத்தும் பொலித்தீன் பாவனையை நிறுத்துவோம்' கருப்பொருளுக்கு அமைவாக மாவட்ட சுற்றாடல் தின நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபை வளாகத்தில் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் எஸ் சுரேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை(05.06.2025) இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் கலந்து கொண்டார். சுற்றாடல் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
உலக தினத்தை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு கோட்டை பூங்கா வளாகத்தில் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து சுற்றாடலில் முக்கியத்துவம் பற்றி அதிதிகளின் உரைகள் இடம்பெற்றதுடன் பொலித்தீன் பாவனையை தவிர்க்கும் பொருட்டு துணி வகைகளால் தயாரிக்கப்பட்ட பேக்குகளும் அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எஸ். தனஜெயன், மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் உயர் அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri
