மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் உடனடியாக இடமாற்றம்
மட்டக்களப்பு - ஏறாவூர்பற்று பிரதேச செயலாளராக கடமையாற்றிய வில்வரெட்னம் கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராகத் தற்காலிகமாக கிரான் பிரதேச செயலாளர் இணைக்கப்பட்டுள்ளார்.
செங்கலடி பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ந.வில்வரெட்னம் தொடர்பில் பெண்ணொருவர் வழங்கிய பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பிரதேச செயலாளர், அனுமதிப்பத்திரம் ஒன்றைப் பெறச்சென்ற பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியிருந்ததாகக் குறித்த பெண் வெளியிட்ட தகவல்களும், குறித்த பெண்ணிடம் பிரதேச செயலாளர் உரையாடிய குறுஞ்செய்தி உரையாடல்களும் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.
இது தொடர்பில் குறித்த பெண்ணால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், பொது நிர்வாக திணைக்களம், ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றிற்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் பொது நிர்வாக அமைச்சின் அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து குறித்த பெண் உட்பட மூவரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த பிரதேச செயலாளரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பதற்கான தேவையிருப்பதாகக் கருதப்பட்டு அவரை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
