மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிற்கு சேவைகால நீடிப்பை நிராகரித்த அமைச்சு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் சேவைகால நீடிப்பு கடிதம் மறுக்கப்பட்டதன் காரணமாக தனது சேவையில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
கடந்த 27.09.2023 அன்று சேவைகால நீடிப்பு கடிதம் மறுக்கப்பட்டமை தொடர்பில் பொது உள்நாட்டு அமைச்சு அறிவித்ததையடுத்து இன்றைய தினம் தனது 60 வயதில் ஓய்வு பெறவுள்ளார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கடந்த ஜனவரி 18ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையை பெறுப்பேற்றிருந்தார்.
கால நீடிப்பு கடிதம்
இந்த நிலையில் தனது ஓய்வூதிய காலத்தின் பின்னர் தொடர்ந்து அரச சேவையில் கடமையாற்றுவதற்கு பொது உள்நாட்டு அமைச்சிடம் சேவை கால நீடிப்பு கோரியிருந்தார்.
கால நீடிப்புக்கான அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் அனுப்பபட்டதன் காரணமாக அவர் இன்றுடன் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
