மட்டக்களப்பில் அதிகளவில் இனங்காணப்படும் கோவிட் தொற்றளர்கள் - வைத்தியர் நாகலிங்கம் மயூரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது அலையில் 3968 பேர் கோவிட் தொறுக்கு இலக்காகியுள்ளதுடன், 63 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவானோர் இனங்காணப்படுவதன் காரணமாக பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை பேணி செயற்படுமாறும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று காலை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 89 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அல்பா வேரியன் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் தற்போது டெல்டா வேரியனும் இனங்காணப்பட்டுள்ளது.
இது இந்தியாவினை சேர்ந்தது, ஆபத்து நிலை அதிகமானது. இவ் வைரஸ் எந்தநேரத்திலும் மட்டக்களப்புக்கு வரக் கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்ற காரணத்தினால் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களை வீடுகளில் இருந்து மிகவும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேணுமாறும் வலியுறுத்தியுள்ளார்.