மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு
மட்டக்களப்பு நீதிமன்ற எல்லைக்குள் யுத்தத்தினால் மரணித்த தமிழீழ் விடுதலைப் புலிகளின் நினைவு கூருவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட 5 பேருக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்து கட்டளை ஒன்றை வழங்கியுள்ளது.
கடந்த 19 ம் திகதியில் இருந்து எதிர்வரும் 27ம் திகதி இரவு வரை மட்டக்களப்பு நீதிமன்ற எல்லைக்குள் யுத்தத்தினால் மரணித்த தமிழீழ விடுதலைப் புலிகளினை நினைவு கூருவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் ஒன்றிணைப்பின் கீழ் கிழக்கு மாகாண தலைவர் சிவயோகநாதன் சீலன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ். முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். ஞானமுத்து சிறிநேசன் ஆகியோருடன்,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் யோகராசா தர்மிதன், என்பவர்களுடைய தலைமையில் அவர்கள் சார்ந்த உறுப்பினர்களால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் மரணித்தவர்களுக்கு விளக்கேற்றி நினைவு கூர இருப்பதாக நம்பகரமான தகவலின் பிரகாரம், இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதுடன், மீண்டும் தூண்டுகின்ற செயற்பாடு காணப்படுவதால் இந்த நினைவு கூரல் சம்பவம் நடைபெறாமல் தடை உத்தரவு ஒன்றை மேற்குறித்தவர்களுக்கும் அவர்கள் சார்ந்த உறுப்பினர்களுக்கும் எதிராக 1979 ம் ஆண்டின் 15 ம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்ட கோவை (106)1, (106)2, பிரிவின் கீழ் தடை உத்தரவு ஒன்றை கோரி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே.பி. கெட்டியாராச்சி நீதிமன்றில் சமர்பித்தார்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக கடந்த 19; திகதியில் இருந்து 27 ம் திகதி வரை இந்த நினைவேந்தலில் ஈடுபட தடை உத்தரவு பிறப்பித்து கட்டளை ஒன்றை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,மாவீரர் நாளை முன்னிட்டு எதிர்வரும் 21.11.2021ம் திகதி தொடக்கம் 28.11.2021 வரை குறித்த மாவீரர் நினைவு தினத்தை அனுஷ்டிக்கக் கூடாது என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு காத்தான்குடி பொலிஸாரினால் தமிழரசு வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கி.சேயோனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் தின நிகழ்வுகளுக்குத் தடை விதித்து வடக்கு கிழக்கு பூராகவும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்களைக் குறி வைத்து தடையுத்தரவு வழங்கும் படலம் பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக கடந்த 20ம் திகதி எனக்கும் காத்தான்குடி பொலிஸாரினால் தடையத்தரவு வழங்கப்பட்டது. இதில் விசேட அம்சம் என்னவெனில் இரவு வேளையில் வீட்டுக் கதவினைத் தட்டியும் இத்தடையுத்தரவுகள் கையளிக்கப்படுகின்றன என்பது தான்.
இத்தடையுத்தரவில் எனது பெயர் , நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உட்பட 12 பேரின் பெயர்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஆயுதமௌனிப்பிற்குப் பின்னரான பதின்மூன்றாண்டுகள் 10 மணி நேரம் முன்

வெளியிடத்தில் 11 வயது மகளை இப்படியா நடத்துவீங்க? ஐஸ்வர்யா ராயை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் Manithan

அழியும் உக்ரைன்... ரஷ்ய கோடீஸ்வரர்களின் சொத்துக்களை மீட்டு செலவிட வேண்டும்: எழுந்த கோரிக்கை News Lankasri

பந்துவீச வேகமாக ஓடிவந்த பாண்டியாவை கையை காட்டி நிறுத்திய கோலி! கோபத்தில் பந்தை தூக்கி வீசிய வீடியோ News Lankasri

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

இங்கு பாலியல் அடிமைகளாக கேரள செவிலியர்கள்! வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர் பேசிய வார்த்தையால் அவருக்கு நேர்ந்த கதி News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022