மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரின் தாயார் கோவிட் தொற்றினால் மரணம்
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவனின் தாயார் ரஞ்சிதம் சொர்ணலெட்சுமி தியாகராஜா மரணமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவனின் தாயார் ரஞ்சிதம் சொர்ணலெட்சுமி தியாகராஜா புதன்கிழமை மாலை (08) தனது 85 ஆவது வயதில் கல்லடியிலுள்ள தனதில்லத்தில் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளார்.
இவர் முன்னாள் கல்லடி சிவானந்தா வித்தியாலய அதிபரும், மட்டக்களப்பு
மாநகரசபையின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மட்டக்களப்பு வலய கல்விப்
பணிப்பாளரும், முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளரும் மற்றும் கிழக்கு மாகாண
கல்வி கலாச்சார அமைச்சின் முன்னாள் செயலாளருமான அமரர் கந்தையா தியாகராஜாவின்
மனைவியுமாவார்.