காலிமுகத்திடல் வன்முறை! தூண்டியவர்களுக்கு பயணத்தடையை கோரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!
காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஈடுபட்டவர்களுக்கு பயணத் தடை விதிக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்துள்ளது.
பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், அமைதியை மீட்டெடுக்கவும் அதிகாரிகள் தரப்பில் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை தேவை என்று சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்
இதன்படி, தமது நோக்கத்துக்காக வன்முறைக் குழுக்களை அலரிமாளிகையில் இருந்து கட்டவிழ்த்துவிடத் தூண்டிய, சதி செய்த மற்றும் வன்முறையில் கலந்து கொண்ட அனைவரையும் சட்டத்தின்கீழ் உடனடியாகக் கைது செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோருகிறது.
அவர்கள் அரசாங்கத்தில் அல்லது அவர்களது குடும்பத்தினர்; எந்த பதவியில் இருந்தாலும், அதனை கருத்திற்கொள்ளாது இது நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று சாலிய பீரிஸ் கோரியுள்ளார்.
பொலிஸாரால் இவ்வாறானவர்களுக்கு எதிராக உடனடி பயணத் தடைகள் பெறப்பட வேண்டும் என்றும் சாலிய பீரிஸ் கேட்டுள்ளார்
இதேவேளை தனி ஆட்களின் சொத்துக்கள் மற்றும் அரச சொத்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறும், அத்தகைய வன்முறையில் ஈடுபடுபவர்களையும் விசாரணை செய்து, கைது செய்து சட்டத்தின்படி கையாள வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 12 மணி நேரம் முன்

மீனாவுக்கு அவரின் கணவர் கொடுத்த முதல் பரிசு என்ன தெரியுமா? அசத்திய சாகர்...உடனே ஓகே சொன்ன மீனா Manithan

மரணத்தில் சந்தேகம்! கணவரை காப்பாற்ற மீனா ஏன் முயற்சிக்கவில்லை? சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர் News Lankasri

விஜய் டிவி ராமர் இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்....இது தெரியாம போச்சே? Manithan

கமலை தொடர்ந்து Comeback கொடுத்த இயக்குநர் ஹரி ! யானை திரைப்படத்திற்கு குவியும் சிறந்த விமர்சனங்கள்.. Cineulagam

தேனிலவின்போது பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி: பதறவைக்கும் ஒரு செய்தி News Lankasri
