நெருக்கடியில் இருந்து மீள ஜப்பான் மற்றும் சீனாவின் பக்கம் திரும்பும் பசில்
நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வுகாண இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதை போன்ற நிவாரணப் பொதிகளை சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளவது தொடர்பான யோசனையை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச,(Basil Rajapaksa)அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.
10 பக்கங்களை கொண்ட இந்த யோசனையை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த தயார் எனவும் தெரியப்படுத்தியுள்ளார்.
இலங்கை தற்போது பெற்றுக்கொண்டுள்ள கடனில் 20 வீதமான கடன் ஜப்பான் மற்றும் சீனாவிடம் இருந்து பெறப்பட்டுள்ளதுடன் இந்த பேச்சுவார்த்தை மூலம் பெறப்பட்டுள்ள கடனை செலுத்துவதற்கான காலத்தை நீடித்துக்கொள்வது, செலுத்துவதற்கான நிவாரண காலத்தை பெற்றுக்கொள்வது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam