நெருக்கடியில் இருந்து மீள ஜப்பான் மற்றும் சீனாவின் பக்கம் திரும்பும் பசில்
நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வுகாண இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதை போன்ற நிவாரணப் பொதிகளை சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளவது தொடர்பான யோசனையை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச,(Basil Rajapaksa)அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.
10 பக்கங்களை கொண்ட இந்த யோசனையை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த தயார் எனவும் தெரியப்படுத்தியுள்ளார்.
இலங்கை தற்போது பெற்றுக்கொண்டுள்ள கடனில் 20 வீதமான கடன் ஜப்பான் மற்றும் சீனாவிடம் இருந்து பெறப்பட்டுள்ளதுடன் இந்த பேச்சுவார்த்தை மூலம் பெறப்பட்டுள்ள கடனை செலுத்துவதற்கான காலத்தை நீடித்துக்கொள்வது, செலுத்துவதற்கான நிவாரண காலத்தை பெற்றுக்கொள்வது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri