பசில் ராஜபக்ச பதவி விலக மாட்டார்: பொதுஜன பெரமுண கட்சி வட்டாரங்கள் தெரிவிப்பு
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக மாட்டார் என்றே பொதுஜன பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பசில் ராஜபக்ச தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யவுள்ளதாகவும், அந்த வெற்றிடத்துக்குப் பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

பிரபல தொழிலதிபரின் கோரிக்கை
இந்நிலையில், அண்மையில் தொழிலதிபர் தம்மிக பெரேராவும் தனக்கு ஒரு அமைச்சுப் பதவி வழங்கினால் நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் வழியை அறிந்து வைத்திருப்பதாகத் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்திருந்தார்.
எனினும் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யமாட்டார் என்றே பொதுஜன பெரமுண கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 5 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri