பசிலை பதவி நீக்க முடியாது! - பிரதமர் மகிந்த திட்டவட்டம்
ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கருத்துக்களுக்கு அமைய நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை பதவி நீக்க முடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கும், பதவி நீக்குவதற்குமான அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட குரோதங்களை மனதில் கொண்டு அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யுமாறு கோரி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காண உதவிகளை வழங்க வேண்டுமே தவிர அரசாங்கத்தை விமர்சனம் செய்வது எதிர்க்கட்சிகளின் கடமையாகாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
