மகிந்த மற்றும் பசிலுக்கெதிரான வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை இனி நடைமுறையில் இல்லை என்று உயர் நீதிமன்றம் இன்று (22.03.2023) உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சேவை பெறுநர்களுக்குரிய பயணத்தடை நீடிக்கப்படவில்லை
மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மாரப்பன, நீதிமன்றில் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

கடந்த அக்டோபர் 7ஆம் திகதிக்குப் பின்னர் தமது சேவை பெறுநர்களுக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் நீடிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இதைக் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், பிரதிவாதிகள் இருவருக்கும்
விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை இனி நடைமுறையில் இல்லை என்பதைக் குடிவரவு
மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்குத் தெரிவிக்குமாறு உயர் நீதிமன்றப்
பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
முன்னாள் மனைவி, குடும்பத்தினரைக் கொல்ல 9 கூலிப்படைகளை அனுப்பிய நபர்: பிரித்தானியாவில் கைது News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri