நீதிமன்றில் வசமாக சிக்கிக் கொண்ட பசில் - விமான டிக்கெட்டுகளால் அம்பலத்திற்கு வந்த மோசடி

Matara Basil Rajapaksa Crime Branch Criminal Investigation Department Money
By Vethu Nov 22, 2025 11:48 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இலங்கைக்கு வருகை தர விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த போதும் அவை ரத்து செய்யப்பட்டதாக மாத்தறை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறையில் முறைகேடான பணத்தைப் பயன்படுத்தி காணி கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தகவல்கள் தெரியவந்தன.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைத் தவிர, அவரது மனைவியின் சகோதரி அயூமா கலப்பத்தி, அவரது கணவர் திஸ்ஸா கலப்பத்தி மற்றும் முதிதா ஜெயக்கொடி ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணை

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​பசில் ராஜபக்ஷ மற்றும் அயூமா கலப்பத்தி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, மேலும் அவர்களின் பிணைத்தாரர்கள் மட்டுமே அவர்கள் சார்பாக ஆஜராகியுள்ளனர்.

நீதிமன்றில் வசமாக சிக்கிக் கொண்ட பசில் - விமான டிக்கெட்டுகளால் அம்பலத்திற்கு வந்த மோசடி | Basil Got Sick Again In Us

பசில் ராஜபக்ஷ சார்பாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் அனில் சில்வா, தனது கட்சிக்காரரின் மருத்துவ நிலையை உறுதிப்படுத்தும் பல மருத்துவ அறிக்கைகள் அடங்கிய ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அறிக்கைகளை ஆய்வு செய்த பின்னர் சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, சந்தேக நபரின் மருத்துவ நிலைமைகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

“இந்த வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான பசில் ராஜபக்ஷ, கடைசியாக 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி அன்று இந்த வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

அதாவது இந்த சந்தேக நபர் ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் இல்லாததால், இந்த வழக்கு தாமதமாகிறது.

முந்தைய விசாரணையில், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

மருத்துவ அறிக்கை

அன்றைய விசாரணையின் போது மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்த ஜனாதிபதி வழக்கறிஞர், சந்தேக நபர் திடீரென நாற்காலியில் இருந்து விழுந்த விபத்தில் தலை மற்றும் கழுத்தில் நரம்பு காயம் அடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

நீதிமன்றில் வசமாக சிக்கிக் கொண்ட பசில் - விமான டிக்கெட்டுகளால் அம்பலத்திற்கு வந்த மோசடி | Basil Got Sick Again In Us

அன்று சமர்ப்பிக்கப்பட்ட எக்ஸ்ரே அறிக்கைகளின்படி, சந்தேக நபருக்கு எலும்பு முறிவு இல்லை என்பது தெளிவாகிறது. அன்று மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்த ஜனாதிபதி வழக்கறிஞர், சந்தேக நபர் இன்று (நேற்று) நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

சந்தேக நபர் நாற்காலியில் இருந்து விழுந்துள்ளார் எனவும், சந்தேக நபர் தலை மற்றும் கழுத்தில் நரம்பு காயத்தால் அவதிப்பட்டு வருகின்றார் என்ற மருத்துவ அறிக்கைகள் ஜோர்ஜ் சிடி என்ற மருத்துவரால் வழங்கப்பட்டன.

எனினும் இன்று, அதே மருத்துவரின் கையொப்பத்தின் கீழ், சந்தேக நபர் இடது பக்கத்தில் உணர்வின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ அறிக்கைகள் ஒரே மருத்துவரால் வழங்கப்பட்டிருந்தாலும், இந்த மருத்துவ அறிக்கைகளின் லெட்டர்ஹெட்கள் முதல் பார்வையில் வேறுபட்டவை. மேலும், ஜோர்ஜ் சிடி என்ற இந்த மருத்துவர் ஒவ்வொரு அறிக்கையிலும் சந்தேக நபரின் அறிகுறிகளை மட்டுமே குறிப்பிட்டு, அவர் விமானப் பயணத்திற்குத் தகுதியற்றவர் என பரிந்துரைத்துள்ளார்.

சந்தேக நபர் விமானத்தில் பயணிக்க தகுதியற்றவர் என்று மருத்துவர் பரிந்துரைத்த போதிலும், சந்தேக நபர் இன்று இலங்கைக்குத் திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பின்னர் அந்த டிக்கெட்டுகளை இரத்து செய்துள்ளார்.

இந்த மருத்துவர் கடந்த செப்டம்பர் 14,ஆம் திகதி அன்று சந்தேக நபரின் மருத்துவ நிலை, அவர் விமானத்தில் பயணிக்கத் தகுதியற்றவர் என்று பரிந்துரைத்துள்ளார்.

எனினும், சந்தேக நபர் நவம்பர் 18-21 க்கு இடையில் விமானத்தில் இலங்கைக்குத் திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய செப்டம்பர் 25ஆம் திகதி அன்று ஒரு விமான நிறுவனத்திற்கு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார்.

எனினும் சந்தேக நபர் பின்னர் ஒக்டோபரில் அவற்றை ரத்து செய்துள்ளார். மேலும் சந்தேக நபருக்கு விமான நிறுவனம் அனுப்பிய விமானச் சரிபார்ப்பு படிவத்தில், அவர் வேறொரு நபரின் உதவியுடன் வழக்கமாக விமானத்தில் பயணிக்க முடியும் என்று தெளிவாகக் கூறுகிறது.

அந்த படிவத்தில் விமானத்தில் சிறப்பு நாற்காலி, படுக்கை அல்லது ஒக்ஸிஜன் தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, சந்தேக நபரின் மருத்துவ நிலை குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதால், இது தொடர்பாக ஒரு உத்தரவைப் பிறப்பிக்குமாறு என துணை சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்தைக் கோரினார்.

மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US