தேர்தல் சட்டத்தை உருவாக்கும் தெரிவுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள பசில் மற்றும் ஹக்கீம்
தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை செய்யும் விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களா நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த தீர்மானத்தை இன்று காலை நாடாளுமன்ற அவைக்கு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 101 ஏற்பாடுகள் மற்றும் நாடாளுமன்றம் கடந்த 21 ஆம் திகதி நிறைவேற்றிய யோசனைக்கு அமைய தேர்தல், வாக்கெடுப்பு முறை மற்றும் சட்டத்திட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.
இந்த தெரிவுக்குழு, அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரிடம் கருத்துக்களை கேட்டறிந்துள்ளது.
இது தொடர்பான இறுதி அறிக்கை நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
இந்த விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக அமைச்சர் தினேஷ் குணவர்தன செயற்பட்டு வருகின்றார்.