தாமரை கோபுரத்தில் வெளிநாட்டவர் காயம்
கொழும்பு தாமரைக் கோபுரத்தில் சாகச விளையாட்டுப்போட்டியில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று ஆரம்பமான (Base Jump) எனப்படும் சாகச நிகழ்வு தொடர்ச்சியாக மூன்று நாட்களாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்று நிகழ்த்தப்பட்ட குறித்த சாகச போட்டியில் அமெரிக்க பிரஜை ஒருவர் காயமடைந்துள்ளார்.
உயிராபத்து இல்லை
தாமரைக்கோபுரத்தின் உச்சியிலிருந்து குதித்த வெளிநாட்டவர் பாராசூட்டில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக அதை திறக்க தாமதமானதால் கூரை மீது விழுந்த நிலையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும், வெளிநாட்டவருக்கு உயிராபத்து இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan