யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலையில் நடந்த மோசடி..! அர்ச்சுனா எழுப்பிய அதிரடி கேள்விகள்
யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலையில் நடந்துள்ள நிதி மோசடி குறித்து முறைப்பாடு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பினார்.
இன்று நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சிடம் மேற்கண்ட விடயம் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதன்போது அவர், "வடக்கு மாகாணத்தில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் ஒரேயொரு வைத்தியசாலையாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இருக்கின்றது.
கொடுக்கல் வாங்கல்கள்..
குறித்த வைத்தியாலையில் பொருளாளர் ஒருவர் கடமையாற்றுவதில்லை. இந்த வைத்தியசாலை நேரடியாக பிராந்திய வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் கேதீஸ்வரனின் கீழ் இயங்குகின்றது.
மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரவின் கீழும் நிர்வகிக்கப்பட்டு மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகின்றது.
இந்த வைத்தியசாலையில் புற்று நோய் பிரிவில் பொறுப்பு வைத்தியராக கடமைபுரியும் வைத்தியர் கிருஷாந்தி, வைத்தியசாலையின் குறித்த பிரிவுக்கான தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை செய்து கொண்ட வங்கி கணக்கிலக்க புத்தகங்கள் இரண்டு விசாரணையில் வெளிவந்துள்ளன. அதை என்னால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடியும்.
கால அவகாசம்..
அதேவேளை, வைத்தியர் கேதீஸ்வரன் புற்றுநோய் பிரிவிற்கான மாகாண பொதுச்செயலாளரின் அனுமதியின்றி 30 மில்லியன் பெறுமதியான கட்டிட ஒப்பந்தம் ஒன்றை முறையற்ற ரீதியில் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில் முறைப்பாடு அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கடந்த பின்னும், சுகாதார அமைச்சின் ஊடாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு ஊடாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
அதேவேளை, குறித்த மோசடி தொடர்பிலும் அதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பிலும் அர்ச்சுனா கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இவ்விடயம் தொடர்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா





Viral Video: உலகத்துல இப்படியொரு சிறிய டிசைனரை பார்த்திருக்கவே மாட்டீங்க... தங்கைக்கு வடிவமைத்தை ஆடையைப் பாருங்க Manithan
