பெருந்தோட்டயாக்க நிர்வாக பிரிவுக்கு, பெருந்தோட்டத்தில் கல்விகற்ற இளைஞர் யுவதிகள்: பாரத் அருள்சாமி

Colombo Sri Lanka
By Thirumal Apr 05, 2024 04:20 PM GMT
Report

பெருந்தோட்டயாக்க நிர்வாக பிரிவுக்கு, தோட்டத்தில் கல்விகற்ற இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுகின்றனர் என மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி (Bharat Arulsamy) தெரிவித்துள்ளார்.

மக்கள் பெருந்தோட்டயாக்கத்தின் 48 ஆம் ஆண்டு விழா கொழும்பில் (Colombo) அமைந்துள்ள தலைமை காரியாலத்தில் இன்று (05.04.2024) நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கச்சதீவை சீன இராணுவம் ஆக்கிரமித்தால் நிலைமை மோசமடையும்! வெளியான எச்சரிக்கை

கச்சதீவை சீன இராணுவம் ஆக்கிரமித்தால் நிலைமை மோசமடையும்! வெளியான எச்சரிக்கை


பெருந்தோட்டயாக்கத்தின் வளர்ச்சி

அவர் மேலும் கூறுகையில், “இந்த 48 வருட பாதையில் பெருந்தோட்டயாக்கத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்க்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

பொருளாதாரத்தில் பெருந்தோட்டத்துறை இன்று 390 பில்லியன் பெருமதியாக காணப்பட்டு வருகிறது. 

Bharat Arulsamy speech at colombo

இவ்வளர்ச்சியில் எமது மக்களின் வியர்வை ரத்தம் மற்றும் தியாகங்கள் பல்வேறு வகையில் உந்து சக்தியாக இருந்தது. 

இருப்பினும், அவர்களுக்கான உரிமைகள் மற்றும் வசதிகள் சரியான முறையில் கிடைக்கப் பெற்றுள்ளதா இன்னும் அவை கேள்விகுறியாகவே உள்ளது.

1948 நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த போது எமது மக்கள் நாடற்றவர்களாக மாற்றப்பட்டனர். 1960களில் எங்களுடைய சொந்தங்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டார்கள். 

Bharat Arulsamy speech at colombo

1980களில் நாட்டில் ஏற்பட்டிருந்த இனக் கலவரங்களினால் மக்களின் வாழ்வாதாரம் மட்டும் அன்றி உயிர்களையும் இழக்க வேண்டியிருந்தது.

1990ஆம் ஆண்டுக்கு பிறகு உள்நாட்டு யுத்தத்திலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையும் காணப்பட்டது. 

அதேபோல் 2002 ஆம் ஆண்டு வரை நாம் இலங்கை பிரஜை ஆவதே எமது நோக்கமாக இருந்தது. 

தற்போது அபிவிருத்தி காலப்பகுதியில் நாம் உள்ளோம். எமது மக்களுக்கு தேவையான வீடமைப்பு மற்றும் காணி உரிமை தொடர்பான அனைத்து திட்டங்களையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நாங்கள் செய்துவருகிறோம்.

Bharat Arulsamy speech at colombo

அந்த வகையில் எமது சமூகம் இலங்கையில் ஒரு தனித்துவ அடையாளத்தோடு பொருளாதார சமூக மற்றும் அந்தஸ்தோடு தலைநிமிர்ந்து வாழவை சொல்லில் மாத்திரமன்றி செயல்படுத்தியும் வருகின்றோம். 

மக்கள் பெருந்தோட்ட யாக்கத்தில் சேவையாற்றிய பல தொழிலாளர்கள் இன்னும் அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் சேவைக்கால கொடுப்பனவு வழங்கப்படாமல் அவதியுறுகின்றனர். 

கடந்த காலங்களில் பெருந்தோட்டயாக்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்கள் சரியான முறையில் முகாமைத்துவத்தை மேற்கொள்ளாததன் காரணமாக எமது மக்கள் அதற்கான சுமையை தாங்க வேண்டியதாக உள்ளது. 

Bharat Arulsamy speech at colombo

ஜனாதிபதிக்கு கோரிக்கை

தற்போது இந்த கொடுப்பனவுகள் மற்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத்தொகை எமது தொடர் அழுத்தங்கள் காரணமாக சிறிது சிறிதாக வழங்க பட்டாலும் மிகுதி நிலுவை தொகையை துரித கதியில் வழங்க நிதி அமைச்சர் என்ற ரீதியில் நாம் ஜனாதிபதி அவர்களுக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளோம். 

Bharat Arulsamy speech at colombo

எந்த ஒரு தொழில்துறையும் வளர்ச்சி பெற அதன் முக்கிய மூலதனமான மனித வளத்துறை மேம்பட வேண்டும். இன்று நியமனங்களை பெரும் இந்த இளைஞர்களும் யுவதிகளும் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்ற வேண்டும். 

அதுமாத்திரமன்றி இவர்களை போல பலர் இந்த பெருந்தோட்ட கைத்தொழில் துறையை நவீனமயமாக்குவதற்கும் அதனுடனான தொழில்துறை வளர்ச்சிக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பங்குதாரர்களாக ஆகவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு ”என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இந்நிகழ்வில் நிர்வாகப் பிரிவிற்கு தோட்டப்புறங்களில் கல்வி பயின்று புலமை பெற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். 

Bharat Arulsamy speech at colombo

அதற்கமைய முதல் கட்டமாக ஹந்தான, மவுண்ட்ஜீன், லூல்கந்தூர, ரஹத்துங்கோட, போன்ற தோட்டங்களுக்கு நிர்வாக பிரிவிற்கு இளைஞர், யுவதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். 

இதன்போது கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி, 48 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் மக்கள் பெருந்தோட்டயாகத்திற்கும், அதனை சிறப்புற நடாத்தி செல்லும் தலைவர் அபேயசூரிய மற்றும் பொது முகாமையாளர் பிரதீப், அனைத்து அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களை மற்றும் நன்றிகளை கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள வைத்தியரான மகளிடம் செல்லும் முருகன் மற்றும் நளினி

பிரித்தானியாவில் உள்ள வைத்தியரான மகளிடம் செல்லும் முருகன் மற்றும் நளினி

ஜப்பானில் வேலை வாய்ப்பு: பல கோடி ரூபா பணமோசடியில் சிக்கிய நபர்

ஜப்பானில் வேலை வாய்ப்பு: பல கோடி ரூபா பணமோசடியில் சிக்கிய நபர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US