இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியில் (Central Bank of Sri Lanka) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே பண பரிவர்த்தனைகளைப் பெற முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தோட்டங்களிலும், அவ்வாறான போலியான இடங்களிலும் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும், மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே பண பரிவர்த்தனைகளைப் பெற முடியும்.
முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தல்
சில போலி நிறுவனங்கள் இதுபோன்ற பல்வேறு முறைகளில் வைப்புத்தொகையை ஏற்றுக்கொண்டால், மத்திய வங்கி அல்லது பொலிஸிடம் மக்கள் முறைப்பாடு செய்ய வேண்டும்.
எனவே, மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத எந்தவொரு நிறுவனத்திலோ அல்லது பயிர்ச்செய்கை உள்ளிட்ட போலி பண முதலீட்டு திட்டங்களிலோ மக்கள் பணத்தை வைப்பிலிடாமல் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam
