மயான பூமியாக மாறும் பங்களாதேஸ் தலைநகர்! பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம்
பங்களாதேஸ் (Bangladesh) தலைநகர் டாக்காவில் (Dhaka) ஏற்பட்டுள்ள கலவரத்தால் இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அப்பகுதியில் ஊரடங்கு சட்டம் (Curfew) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஸில் அரச வேலைவாய்ப்புகளுக்கான ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடாத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
இதனையடுத்து, நேற்றையதினம் (19.07.2024) போராட்டக்காரர்கள் நரசிங்கிடி சிறைச்சாலை மீது தாக்குதல் மேற்கொண்டதன் பின்னர் பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) ஊரடங்கு சட்டத்தினை பிறப்பித்தார்.
முடக்கப்பட்ட தொலைத்தொடர்பு
இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் பங்களாதேஸ் இராணுவம் வீதிக்கு இறங்கும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Stop Violence on students#BangladeshBleeding #Starlink_for_Bangladesh #BanglaBlockedpic.twitter.com/IdYCYgFNXr
— Dr Ahmad Rehan Khan (@AhmadRehanKhan) July 19, 2024
அதேவேளை, பங்களாதேஸின் அனைத்து தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகளும் ஏறக்குறைய முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதோடு பல்கலைக்கழகங்களும் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
