பங்களாதேஷில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து : தொடரும் மீட்பு பணிகள்
பங்களாதேஷ் நாட்டின் ராஜ்பாரி பகுதியில் உள்ள பத்மா ஆற்றில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, மிதவைப் பாலத்தில் ஏற முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை
அதிகாரிகளின் தகவலின்படி, பேருந்து சுமார் 30 அடி ஆழத்திற்கு மூழ்கியுள்ளதுடன், ஒரு சிறிய படகு மோதியதாலும் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
🚨🇧🇩 A Souhardya Paribahan bus lost control while boarding a ferry at Daulatdia, Rajbari, and fell into the Padma River.
— Asian U.K. News (@AsianUKNews) March 25, 2026
Some passengers swam ashore, but many are feared missing. #bus #Bangladesh pic.twitter.com/DG7isT9ZcH
தற்போது மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.