அரிசி விற்பனை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்
சதோச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ கிராம் பொன்னி சம்பாவை 98 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula gunawardena) தெரிவித்துள்ளார்.
இலங்கை சந்தையில் அரிசி விலைகள் அதிகரித்தன் காரணமாக அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து, ஒரு கிலோ கிராம் அரிசியை 100 ரூபாவுக்கும் குறைவான விலையில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஒரு தொகை அரிசியை ஏற்றிய கப்பல் இலங்கைக்கு வந்தது. மேலும் ஒரு தொகை அரிசியை ஏற்றிய கப்பல், இன்று இலங்கையை வந்தடையலாம்.
இதன் பின்னர் நாடு முழுவதும் சதோச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ கிராம் பொன்னி அரிசியை 98 ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
