வாழை மரத்தின் இடைப்பகுதியில் இருந்து உருவான வாழைக்குலை: பார்க்க படையெடுக்கும் மக்கள்
நுவரெலியா- கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் வீட்டு தோட்டத்தில் உள்ள வாழை மரத்தின் இடைப்பகுதியில் இருந்து வாழைக்குலை ஒன்று உருவாகியுள்ளமை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டுத் தோட்டத்தில் காணப்படும் இந்த வாழை மரமே தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொதுவாக வாழைமரத்தின் உச்சிப் பகுதியில் இருந்து வெளிவரும் வாழைக்குலை, இந்த முறை மரத்தின் நடுப்பகுதியில், இரு தண்டுகளுக்கிடையில் உருவாகியுள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை மாற்றம்
இயற்கையின் விசித்திர நிகழ்வாக கருதப்படும் இந்த சம்பவத்தை பார்ப்பதற்காக அயலவர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் தொடர்ச்சியாக அந்த வீட்டிற்கு வருகை தருகின்றனர்.

சிலர் இதனை அரிய இயற்கை மாற்றமாகக் கருதுகின்ற நிலையில், இன்னும் சிலர் இதனை தெய்வ அதிசயமாகவும் பேசிக் கொள்கின்றனர்.
வாழைமரத்தின் உட்பகுதியில் சிக்கியபடி வெளிவந்துள்ள இந்த வாழைக்குலை தற்போது சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.



நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri