ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இலங்கையிலிருந்து பயணிக்கத் தடை
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இலங்கையிலிருந்து பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் தற்காலிக அடிப்படையில் தடை விதித்துள்ளது.
குறித்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மற்றும் ட்ரான்சிட் அடிப்படையில் பயணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட உள்ளது.
மேற்குறிப்பிட்ட நாடுகளில் கடந்த 14 நாட்களுக்குள் இருந்த அனைவருக்கும் இந்த தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் ஐக்கிய அரபு இராச்சிய பிரஜைகள் மற்றும் ராஜதந்திரிகள் ஆகிய தரப்பினர் நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது விசேட முன் எச்சரிக்கை பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் அதில் 10 நாள் கட்டாய தனிமைப்படுத்தலும் உள்ளடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.