தமிழ் அமைப்புக்கள் மீதான தடையும் பாெருளாதார மீட்சிக்கான வெற்றிடமும்

Sri Lanka Government Of Sri Lanka
By Thileepan Apr 01, 2025 10:04 PM GMT
Report

மழை நின்றும் தூவானம் நின்று விடவில்லை. அது போல தான் யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் நெருங்கும் நிலையில் கூட தமிழ் மக்கள் மீதான தடைகளும், அமைப்புக்கள் மீதான தடைகளும் பயங்கரவாதம் என்ற பெயரில் தொடர்கின்றது.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை குறித்த விடயம் இன்று பேசுபொருளாக உள்ளது.

இந்தத் தடைகள் மூலம் தடையிடப்பட்ட புலம் பெயர் அமைப்புகளின் பெயர்களை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அத்தோடு அந்த அமைப்பின் செயற்பாட்டாளர்களையும் பெயர் பட்டியிலிட்டு இலங்கை நாட்டிற்கு வரமுடியாதவாறு தடையினைப் பிறப்பித்துள்ளார்கள்.

தமிழ் அமைப்புக்கள் மீதான தடையும் பாெருளாதார மீட்சிக்கான வெற்றிடமும் | Ban On Tamil Organizations

பொருளாதாரக் கொள்கை

இதன் மூலம் அரசாங்கம் சாதிக்க முயல்வது என்ன? தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் உண்மையில் பயங்கரவாத அமைப்புக்களா? இன்னும் பயங்கரவாதம் இருக்கின்றதா என்ற பல கேள்விகள் மக்கள் மனங்களில் எழாமல் இல்லை.

இலங்கை தீவு ஆட்சியாளர்களின் திட்டமிடாத அரசியல், பொருளாதாரக் கொள்கைகளாலும், 30 வருட யுத்தத்தாலும் பொருளாதார ஸ்திர தன்மையை இழந்து பொருளாதார மீட்சிக்காக போராடிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் புலம்பெயர் முதலீட்டாளர்களையும், புலம்பெயர் அமைப்புக்கள், வெளிநாட்டு பல்தேசிய கம்பனிகள் என்பவற்றின் உதவிகளைப் பெற்று நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது.

ஆனால் கடந்த கால அரசாங்கங்களைப போல இவ் அரசாங்கமும் புலம் பெயர் அமைப்புக்களையும், நபர்களையும் தடை செய்து நாட்டிக்கு வரும் முதலீடுகளை குறைக்கும் செயற்பாட்டையே மேற்கொள்கின்றது.

தமிழ் தேசிய இனம் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தயாரில்லை. அகிம்சை ரீதியில் தனக்கான உரிமைக்காக ஜனநாயக இடைவெளிகளைப் பயன்படுத்தியே போராடி வருகின்றது.

அதற்கு பக்க பலமாக புலம் பெயர் அமைபபுக்களும், புலம் பெயர் தமிழ் மக்களும் செயற்படுகிறார்களே தவிர, மாறாக புலி உருவாக்கம் இடம் பெறவில்லை.

அதற்கான வாய்ப்புக்களும் 16 வருடங்களுக்கு பின் இருக்குமா என்பதை சிந்திக்க வேண்டும். வடக்கு - கிழக்கில் தேசிய மக்கள் சக்தி கூட பெருவாரியான வாக்குகளைப் பெற்றுள்ளமையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த பல ஆயிரக்கணக்கான போராளிகள் கைது செய்ய்பட்டு புனர்வாழ்வின் பின் சமூகமயப்படுத்தப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக போராடி வருகிறார்கள். புலம் பெயர் மக்களும் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

ட்ரம்பின் அதிரடி! இந்தியாவுக்கு 100 சதவீத பரஸ்பர வரி

ட்ரம்பின் அதிரடி! இந்தியாவுக்கு 100 சதவீத பரஸ்பர வரி

புலம்பெயர் தமிழர்கள்

இது இலங்கையில் பொருளாதாரத்திற்கு ஒரு பலமாகவும் இருக்கின்றது. ஆனால் பயங்கரவாதம் என்ற ஒரு கண்ணாடியைப் போட்டுக் கொண்டு காலத்திற்கு காலம் கடந்த அரசாங்கங்கள் செய்த அதே தவறை தற்போதைய அரசாங்கமும் செய்கின்றதா என்ற கேள்வி எழுகிறது.

தமிழ் அமைப்புக்கள் மீதான தடையும் பாெருளாதார மீட்சிக்கான வெற்றிடமும் | Ban On Tamil Organizations

இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடம் ஏறுகின்ற அரசாங்கங்கள் காலத்துக்குக் காலம் தமிழர் விவகாரத்துடன் தொடர்புடைய விடயங்களில் தமது நலன்களுக்காக இவ்வாறான முடிவுகளை அறிவிப்பதும், அந்த முடிவுகளை நடைமுறைப்படுத்தாது விடுவதும் மீண்டும் புதிது புதிதாக முடிவுகளை அறிவிப்பதும் வழமையான ஒன்று.

இலங்கை அரசாங்களின் இவ்வாறான நகர்வுகளின் ஒரு நீட்சியே புலம்பெயர் தமிழர்கள் மீதான தற்போதைய தடை ஆகும்.

2009 மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்த பின்னர் இந்த அமைப்புகளில் பல மாறி மாறி பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு மீண்டும் பலமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களின் பின்னர் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி மஹிந்த ராஜபக்‌ச அரசாங்கம் 424 நபர்களையும் 16 அமைப்புகளையும் தடை செய்தது. நல்லாட்சி அரசாங்கம் எட்டு அமைப்புகள் மற்றும் அவற்றில் அங்கம் வகித்த 267 தனிநபர்கள் மீதான தடையை நீக்கியது.

பின்னர் மீண்டும் கோட்டாபய ராஜபக்‌ச அரசாங்கம் ஏழு அமைப்புகளையும் 389 நபர்களையும் தடைப் பட்டியலில் சேர்த்தது. பின்னர் 6 அமைப்புகளும் 316 நபர்களும் மீண்டும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் கட்சிகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறியே புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீதான தடைகளை விதிப்பதும் பின்னர் சில அமைப்புகள் மீதான தடைகளை நீக்குவதும் மீண்டும் தடை விதிப்பதுமாக நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர்.

இதுபற்றி டெய்லிமிரர் (16.08.2022) தனது ஆசிரியர் தலையங்கத்தில் பின்வரும் கேள்விகளை முன்வைத்திருந்தது. தேசிய பாதுகாப்பிற்கு விரோதமான அமைப்புக்கள் என தடைசெய்யப்பட்ட இரண்டு தடவையும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ராஜபக்‌சவால் முடிவெடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் தடையை நீக்கும் முடிவுகளை ரணில் விக்ரமசிங்க முதல் முறையாக பிரதமராகவும் இப்போது ஜனாதிபதியாகவும் இருக்கும் போது எடுக்கப்பட்டுள்ளது.

வங்கியில் சொத்துக்களை அடமானம் வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு

வங்கியில் சொத்துக்களை அடமானம் வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு

உளவுத்துறை மதிப்பீடு

எனவே இவை உளவுத்துறை மதிப்பீடுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல. அரசியல் முடிவுகள் என்று எவரும் முடிவு செய்வது இயல்பானதே.

எவ்வாறாயினும் ஒவ்வொரு முறையும் அரசாங்கத்தின் முடிவுகள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளின் இத்தகைய மதிப்பீடுகள் மற்றும் பரிந்துரைகளுக்கு காரணமாகும் என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்‌சர்களின் ஆதிக்கம் செலுத்தும் அரசாங்கத்தின் தலைவர்கள் காது கேளாத மௌனத்தையும் மீறி சமீபத்திய முடிவுக்கு உடன்படுகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ் அமைப்புக்கள் மீதான தடையும் பாெருளாதார மீட்சிக்கான வெற்றிடமும் | Ban On Tamil Organizations

அத்துடன், 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் எட்டு அமைப்புக்கள் மற்றும் 267 நபர்களை பட்டியலிலிருந்து நீக்கிய போது அவர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பதையும் டெய்லி மிரர் ஆசிரியர் தலையங்கம் அப்போது சுட்டிக் காட்டியிருந்தது.

உண்மையில் 'தேசிய பாதுகாப்பு' என்ற போர்வையில் அரசியல் தலைமைகள் மேற்கொள்ளும் தீர்மானங்களே இவை. இந்தத் தீர்மானங்களுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. கடந்த கால தடைகள், தடை நீக்கம் என்பன மாத்திரமல்ல தற்போதைய தடையும் இதனையே உணர்த்தி நிற்கின்றன.

தற்போதைய ஜனாதிபதி அனுர அரசாங்கம் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 அமைப்புகள் மீதான தடை தொடரும் என அறிவித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் கையொப்பமிட்டுள்ள இந்த வர்த்தமானியில், இந்த அமைப்புகள் தொடர்ச்சியாக பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய ஹைய்ட்டியில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 500 கைதிகளை திறந்து விட்ட ஆயுதக்குழுவினர்

மத்திய ஹைய்ட்டியில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 500 கைதிகளை திறந்து விட்ட ஆயுதக்குழுவினர்

நிதி மற்றும் பொருளாதார சொத்துகள் 

இதன் விளைவாக, அவற்றின் நிதி மற்றும் பொருளாதார சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 222 தனி நபர்களுக்கும் தடை விதித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் மறுவாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலகத் தமிழ் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் நிவாரண நிதி, தலைமையகக் குழு, கனடியத் தமிழர் தேசிய மன்றம், தமிழ் இளைஞர் அமைப்பு என்பவையே இந்த அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புக்களாகும்.

இதில் உண்மையில் பயங்கரவாதததுடன் தொடர்புடையவர்கள் உள்ளார்களா? இந்த அமைப்புக்கள் தொடர்ந்தும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இயங்குகின்றதா என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ் அமைப்புக்கள் மீதான தடையும் பாெருளாதார மீட்சிக்கான வெற்றிடமும் | Ban On Tamil Organizations

உண்மை வெளிப்படுத்தப்பட்டு தடைகளை பரிசீலனை செய்ய வேண்டும. இந்த அமைப்புக்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் 222 தனிநபர் என்பது சாதாரண விடயமல்ல. எமது நாட்டுக்கு வரக்கூடிய வெளிநாட்டு முதலீட்டை அது குறைக்கும்.

எனவே இதனை பாதுகாப்பு அமைச்சும், அரசாங்கமும் அரசில் நோக்க்திற்காக கையாளாது உண்மையான பயங்கரவாதத்தை கண்டறிந்து எமது நாட்டின் பொருளாதார மீட்சிக்கு வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்க வேணடும். அதன் மூலமே நாட்டை பொருளாதார ரீதியாக மீள கட்டியெழுப்ப முடியும்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 01 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
மரண அறிவித்தல்

தம்பசிட்டி, Morden, United Kingdom

29 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, உடுப்பிட்டி, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US