முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக்கிற்கு தடைவிதிப்பு
முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் இலங்கை உதைபந்தாட்ட கூட்டமைப்பினால் (FFSL ) தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று (28.11.2023) விதிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் தொடர்பில் இலங்கை உதைபந்தாட்ட கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அதுவரை முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் போட்டிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் முறைப்பாடு விசாரணை செய்யப்பட்டு பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை அனைத்து போட்டிகளையும் நிறுத்துமாறு மாவட்ட கால்பந்தாட்ட லீக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் நடத்தை மற்றும் நிர்வாகத்திற்கு எதிராகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டில் FFSL கடுமையாக மீறுவதாக தோன்று கின்றது என்றும் மாவட்ட லீக்கின் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டுவரையான அறிக்கைகள்,நிதி அறிக்கைகள்,வருகைப்பதிவு மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் உள்ளிட்ட லீக் தொடர்பான அனைத்து ஆவணங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் டிசம்பர் மாதம் 8 ஆம் தலைமையகத்தில் திகதி விசாரணை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
