பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் நிறுவல்
பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின் (Sanitary Napkin Vending Machine) நிறுவப்பட்டுள்ளது.
பாடசாலையின் பழைய மாணவியர் சங்கத்தின் முழுமையான ஏற்பாட்டில் பாடசாலை வளாகத்தில் அதிபர் வை. சிவபாலன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
புதிய தொழில்நுட்பம்
இலங்கையில் பாடசாலையொன்றில் பெண்பிள்ளைகளுக்காக இத்தகையதொரு புதிய தொழில்நுட்பத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை இதுவே முதன்முறையாகும்.
மேலும், பாடசாலை வரலாற்றில் இதுவொரு மைல்கல்லாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில், பழைய மாணவியர் சங்க உபதலைவி கௌரி ஸ்ரீபிருந்தன், செயலாளர் சரண்யா சுரேஷ் உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |