விபத்தில் சிக்கிய மகளை காப்பாற்ற போராடிய தந்தை: இறுதியில் நேர்ந்த விபரீதம்
பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இளம் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை- கஹடபிட்டிய வீதியில் நேற்று (01) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்லேபெத்த, அமிபாவில பிரதேசத்தில் வசித்து வந்த 32 வயதுடைய திலின ரங்கலால் என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்திற்கான காரணம்
நாய்க்கடிக்கு உள்ளான தனது மகளுக்கு பலாங்கொடை வைத்தியசாலையில் தடுப்பூசியை செலுத்திவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பலாங்கொடை பிரதான பேருந்து நிலையம் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்துக்கொண்டிருந்த போது பின்னால் வந்த லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏழு வயது சிறுமி படுகாயமடைந்த நிலையில், லொறியின் சாரதி வாகனத்தை நிறுத்தாது வேகமாக சென்றுள்ளார்.
பொலிஸார் விசாரணை
குழந்தையை உடனடியாக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு மனைவியிடம் கூறிவிட்டு லொறியை துரத்திச்சென்று லொறியின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சாரதியுடன் தந்தை முரண்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது லொறியின் சாரதி வாகனத்தை நிறுத்தாது மீண்டும் வேகமாக சென்றபோது அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
