ஜனாதிபதியின் விசேட நிதியின் கீழ் சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட பல மில்லியன் ரூபா நிதி
ஜனாதிபதியின் விசேட நிதியின் கீழ் 596 மில்லியன் ரூபா நிதி தனக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R. Shanakiyan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட எருவில் பொது நூலகத்திற்கு இன்று (02.08.2024) 03 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பெறுமதியான புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மக்கள் அவர்களின் மாவட்டம் அபிவிருத்தி அடையும் என நம்பி இரண்டு இராஜாங்க அமைச்சர்களை உருவாக்கி விட்டனர். அதனை இன்று மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
ஜனாதிபதியின் விசேட நிதி
கிராமங்களுக்கு கட்டாயம் அவசியமான வாசிகசாலையை ஒப்பிடும் போது புத்தகங்கள் குறைவாக காணப்படுகின்றன.
மட்டக்களப்பில் பாரிய நூலகம் ஒன்றை உருவாக்குவோம் என கூறியவர்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் கீழுள்ள பொது நூலக கட்டடத்திலுள்ள ஒன்று கூடல் மண்டபம் முழுவதும், புத்தகங்களால் மூடிகாணப்படுகிறது.

மக்களை மடையர்களாக்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் ஒருபோதும் செய்வதில்லை. ஜனாதிபதியின் விசேட நிதியின் கீழ் 596 மில்லியன் ரூபா நிதி எனக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
சாணக்கியன் எம்.பிக்கு மாத்திரம் ஏன் ஜனாதிபதி விசேட நிதி
வழங்கினார் என கேட்பவர்களும் உள்ளார்கள். நான் தனிப்பட்ட ரீதியில்
ஜனாதிபதியிடம் எதுவும் கேட்கவில்லை.
அபிவிருத்தி திட்டங்கள்
நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காதவர்கள் ஏதோ ஒன்றை ஜனாதிபதியிடம் தங்களுக்காகப் பெற்றுள்ளார்கள். நான் மக்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்துதருமாறு கேட்டதற்கிணங்க 596 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் முதற்கட்டமாதக 400 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த நிதி, மக்களின் பொது அபிவிருத்தி திட்டங்களுக்கு பகிரப்பட்டு வருகின்றன.
எருவில் கிராமத்தின் பொது மைதானத்திற்கு 5.5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இப்பிரதேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்குடன் நாம் இருக்கின்றோம்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri