கோதுமை மா தட்டுப்பாட்டின் எதிரொலி! மூடப்படும் ஆயிரக்கணக்கான பேக்கரிகள்
கோதுமை மா தட்டுப்பாடு
நாட்டில் நிலவி வரும் கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக சுமார் இரண்டாயிரம் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு பேக்கரிகள் மூடப்பட்டதால் சுமார் இரண்டு இலட்சம் பேர் தொழில்களை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.
இந்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பாண் தட்டுப்பாடு
இந்த நிலைமையினால் நாட்டில் பாண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
டொலர் இல்லாத காரணத்தினால் நாடு முழுவதிலும் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு நிலவுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் சுமார் ஏழாயிரம் பேக்கரிகள் காணப்பட்டதாகவும், ஏற்கனவே இரண்டாயிரம் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பணியாற்றியவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri