இம்ரான் கானுக்கு பிணை : சிறையில் இருந்து வெளியேற வாய்ப்பில்லை
காணி குத்தகை நிறுவன அதிபர் ஒருவரிடம் இருந்து பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை இலஞ்சமாகப் பெற்றதாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சாட்டப்பட்ட 190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு பிணை(Imran Khan) வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பை இன்று(15.05.2024) பாகிஸ்தானின் மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இரகசிய இராஜதந்திர தொடர்பு
இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றத்தின் இரு உறுப்பினர் அமர்வு நேற்று தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்தநிலையில் இன்று பிணையை பெறுவதற்காக கானிடம் 1 மில்லியன் பிணைப் பணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

எவ்வாறாயினும், இத்தாத் மற்றும் சைபர் வழக்குகளில் அவரது தண்டனை இன்னும் நீடிப்பதால்,அவர் அடியாலா சிறையில் விடுவிக்கப்பட வாய்ப்புகள் இல்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டியில் உள்ள உயர் பாதுகாப்பு அடியாலா சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளார்.

2022 ஏப்ரலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் அவர் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டதிலிருந்து, மறைக்குறியீடு என்ற இரகசிய இராஜதந்திர தொடர்பு வழக்கு உட்பட குறைந்தது நான்கு வழக்குகளில் இம்ரான் கான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam