தென்னகோனுக்கு உதவிய தொழிலதிபருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
கட்டாய விடுப்பில் இருந்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரை நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடுவெல பதில் நீதவான் கமல் பிரசன்ன விஜேசிறி, இன்று (29) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடுவெல நீதவான் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையின் பேரில், பதில் நீதவான் கமல் பிரசன்ன விஜேசிறி, இந்த உத்தரவைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 3ஆம் திகதி மீண்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணை வழங்கப்பட்ட நபர் தலவதுகொட சாந்திபுர பகுதியைச் சேர்ந்த கினி தோட்ட பொல் வட்டகேயைச் சேர்ந்த சுரங்க சஞ்சீவ வீரசூரிய என்ற கோடீஸ்வர தொழிலதிபர் ஆவார்.
சந்தேகநபர், தொழிலதிபர் தனது மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்தி தேசபந்து தென்னகோனுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கியது தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை சந்தேகநபரை விசாரணைக்காக இரண்டு முறை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைத்திருந்தது.
பின்னர், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, தலவதுகொட பகுதியில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவர் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடுவெல நீதவான் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையின் பேரில், பதில் நீதவான் கமல் பிரசன்ன விஜேசிறி, சந்தேக நபர் சிகிச்சை பெற்று வந்த தலவதுகொட பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று சந்தேக நபரை பரிசோதித்துள்ளார்.
அதன் பின்னர் அவர் இந்த உத்தரவைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.