இஸ்ரேல் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட பகீர் சம்பவம் : உக்கிரமடையும் காசா போர்
மூன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மேற்குக் கரைக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான எல்லைக் கடவையில் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்டான் சாரதி இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மீது திடீரென்று துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவமானது சுமார் 11 மாதங்களாக நீடிக்கும் காசா போரினை மேலும் தூண்டுவதாக அமைந்துள்ளது.
வான்வழித் தாக்குதல்
இந்நிலையில் வடக்கு காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு மூத்த உதவி அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது ஜோர்டான் ஆற்றின் குறுக்கே உள்ள ஆலன்பி பாலத்தில் நடந்துள்ளது.
இஸ்ரேல் தரப்பில் நடந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், ஜோர்டானில் இருந்து லொறியில் வந்த தீவிரவாதி ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் தொடர்புடைய தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஜோர்டான் தரப்பில் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், எல்லைக் கடக்கும் பாதை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட சாரதி தெற்கு ஜோர்டானில் உள்ள செல்வாக்குமிக்க ஹுவைதாட் பூர்வகுடி சமூகத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 16 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri
