வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழை : பலர் பாதிப்பு(Photos)
வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 3 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் நேற்று (09) மாலை திடீரென கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதன் காரணமாக பாவற்குளம் படிவம் 6 பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 அங்கத்தவர்களும், பிரமனாலங்குளம் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 அங்கத்தவர்களும், முதலியார்குளம் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 அங்கத்தவர்களும் என 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
அத்துடன், குறித்த மூன்று குடும்பங்களும் வசித்து வந்த 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.




பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
