நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்
இலங்கையில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சீரற்ற காலநிலையையடுத்து, ஏற்பட்ட அனர்த்தங்களால் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
பாதிப்புக்கள்
அத்துடன், ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 624 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 79 ஆயிரத்து 871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 8 ஆயிரத்து 470 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 517 பேர் இடைத்தங்கல் முகாம்களிலும், 45 ஆயிரத்து 418 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 209 பேர் உறவினர் வீடுகளிலும் தங்கியிருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் 103 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.
மேலதிக தகவல் - சிவா மயூரி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam