உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாபா வாங்கா! 2023 ஏற்படபோகும் பேராபத்து: உலகமே முடங்கும் அபாயம்(Video)
எதிர்காலத்தில் நடக்கப் போகின்ற அசம்பாவிதங்களை எதிர்வுகூறுபவர்களை நம்புவது என்பது சற்று கடினம்.
எதிர்காலத்திற்கு காலம் இவ்வாறு நடக்கப்போகின்றது என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் அவற்றில் அரைவாசி பேர் தங்களது சுய விளம்பரத்திற்காக இவ்வாறு புரளியை கிளப்பி விடுவதுடன் சில நாட்களுக்கு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிவிடுகின்றனர்.
ஆனால், அதேபோன்ற ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் கணித்த பல விடயங்கள் நிதர்சனத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நிதர்சனமான உண்மைகள்
பால்கன் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல்கேரியா நாட்டை சேர்ந்த மூலிகை மருத்துவர் ஆவார்.
1911 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்த இந்த பெண் 1996 ஆம் ஆண்டில் தனது 84 வது வயதில் இறந்து போனார்.
எதிர்காலத்தில் பூமியில் என்ன நடக்கும் என்பது குறித்த இவரது கணிப்புகளில் சுமார் 85% அப்படியே துல்லியமாக நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக இரட்டை கோபு தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடங்கி பல்வேறு சர்வதேச விஷயங்கள் அப்படியே நடந்துள்ளது.
இதற்கமைய 2023 ஆம் ஆண்டில் உலகில் என்னவெல்லாம் நடக்கும் என்ற அவருடைய கணிப்புகள் தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றன.
10 ஆண்டுகளுக்குப் பிறகு 2023இல் சூரிய புயல் ஏற்படும் என்று பாபா வாங்கா கணித்திருக்கின்றார். இந்த மெகா சூரிய புயலால் பூமியிலும் பிரச்சினை ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சூரியன் மீது இருந்து வரும் மின்காந்த ஆற்றல் பூமியைப் பாதிக்கும் ஆபத்து இருக்கிறது. அவை பூமியில் உள்ள மின் கட்டமைப்பு மற்றும் ஜிபிஎஸ் சிக்னல்கள் உட்பட பல்வேறு அமைப்புகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகின்றது.
சூரிய புயல் தாக்கம்
2023ஆம் ஆண்டில் சூரிய புயல் பூமியைத் தாக்கும் பட்சத்தில், அது உலகெங்கும் மிகப் பெரிய மின்சாரத் தடையை ஏற்படுத்தலாம். நமது தகவல் தொடர்பு முற்றிலும் முடங்க வாய்ப்பிருக்கிறது. போக்குவரத்து அமைப்புகளை முடங்கும்.

இதன் காரணமாக சமூக குழப்பங்களும் நிதி நெருக்கடிகளும் கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இதில் ஏற்படும் பாதிப்புகள் அடுத்த சில ஆண்டுகள் வரையிலும் தொடரும் ஆபத்தும் உள்ளது என்றே வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை சூரியனின் பூமத்திய ரேகைக்கு உள்ள காந்த இழை மிகப்பெரிய அளவிலான காந்தப்புலக் கோடுகளைக் கொண்டுள்ளது. அதாவது இது வெடித்து சூரிய புயல் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் என்று வைத்தியர் எரிகா பால்மெரியோ தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்ட்ரீமர் வெளியேறினால், இது ஒரு பெரிய அளவிலான கதிர்வீச்சு மற்றும் காந்த ஆற்றலை வெளியிடும். இது பூமியிலும் தொலைத் தொடர்புகளைப் பாதிக்கும்.
இருப்பினும், இது பூமியை நோக்கி வெடித்துச் சிதறுமா என்பது துல்லியமாகத் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri