அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் : மிரட்டும் புலனாய்வு அதிகாரிகள்
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் ஒரு முக்கிய திருப்பமாக, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, நீதிவான் முன்னிலையில் நேற்று(23) முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணையோடு தொடர்புபட்ட 6பேருக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கடும் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 6பேரில் நான்கு சாட்சியாளர்களுக்கும் மற்றைய இருவர் வழக்கு தொடுத்த இரு அருட்தந்தையர்களும் உள்ளடங்குவர்.
மேலும் குறித்த தாக்குதலுக்கு பிரதான சக்தியாக மூன்றாவது சந்தேகநபரான சுரேஷ் சலேதான் இருந்துள்ளார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி....
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri