தவறான முடிவெடுத்து உயிர்மாய்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்
தவறான முடிவெடுத்து உயிர்மாய்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம் தற்கொலைகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், திருகோணமலையை சனிக்கிழமை (06-09-2025) பிற்பகல் வந்தடைந்தது.
இத் தொடர் சைக்கிளோட்ட வீரர்களை திருகோணமலை றோட்டரிக் கழக அங்கத்தவர்களால் வரவேற்கப்பட்டார்கள்.
சைக்கிளோட்டம்
சிசிசி 1333 என்னும் இலவச ஆலோசனை வழங்கும் தொலைபேசி இலக்கத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதனை நோக்காக கொண்டு இலங்கையின் 12 மாவட்டங்களை உள்ளடக்கியதாக தொடர் துவிசக்கர வண்டியோட்ட நிகழ்வை நடாத்தி வருகின்றது.
இந்த தொடர் சைக்கிளோட்டமானது திருகோணமலைக்கு வந்தடைந்ததன் பின்னர் நகரின் பிரதான பேருந்து நிலையத்தில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்தலின் தாக்கம் குறித்து மக்களை விழிப்பூட்டும் முகமாக நிகழ்ச்சி ஒன்றும் மாலை நடாத்தப்பட்டது.
அத்துடன் தற்கொலை மனப்பாங்கை நீக்கக்கூடிய ஆலோசனைகள் 1333 என்ற தொலைபேசி இலக்கம் அடங்கிய கையேடுகளும் இதன் போது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.






