குரங்கு காய்ச்சல் குறித்து இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ள அதிகாரிகள்
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் உலகளவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை அடுத்து, இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தொற்று நோய், தொடர்பில் சர்வதேச ரீதியில் பொது சுகாதார அவசர நிலையை, உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
இலங்கை சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, குரங்கு காய்ச்சலின் உடனடி அச்சுறுத்தல் குறைவாக உள்ளது. இருப்பினும், மேலதிக கண்காணிப்புக்கான நடவடிக்கைகளை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
நோய் அறிகுறி
இதன்படி, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் அதிக கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நோய், பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும்.
இது பொதுவாக காய்ச்சல், சொறி மற்றும் வீங்கிய நிணநீர் கணுக்கள் ஆகியவற்றுடன் வெளிப்படுகிறது மற்றும் பல்வேறு மருத்துவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
உடலில் ஏற்படும் காயங்களுடன் நேரடியாக பரவும். அதேநேரம் பாதிக்கப்பட்ட நபரின் அசுத்தமான ஆடை போன்ற பொருட்களுடன் மறைமுக தொடர்பு மூலமாகவும் இது பரவுகிறது.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam