சுவிட்சர்லாந்தில் விரைவில் அறிமுகமாகும் தானியங்கி வாகனங்கள்
சுவிட்சர்லாந்து அரசாங்கம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் தானியங்கி முறையில் வாகனம் செலுத்துவதற்கு அனுமதி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 2025ம் ஆண்டில் இந்த புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
புதிய முறை
தானியங்கி வாகன செலுத்துகையின் 3ஆம் நிலையைக் கொண்ட வாகனங்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்து வீதிகளில் தானியங்கி வாகன செலுத்துகளை தொடர்பில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகின்ற நிலையில், இந்த புதிய முறையின் கீழ் சாரதிகள் வாகனத்தின் ஸ்டியரிங்கிலிருந்து கைகளை எடுத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தானியங்கி அடிப்படையில் வாகனம் செலுத்தும் போது பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ ஆகிய பண்டக்குறிகளைக் கொண்ட வாகனங்களில் தானியங்கி அடிப்படையில் வாகன செலுத்தக்கூடிய முறைமை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam