விபத்தில் தாயும் மகளும் பலி:தந்தையும் மகனும் படுகாயம்
அனுராதபுரம் கவரக்குளம் பிரதேசத்தில் முச்சக்கர வண்டி கால்வாய் ஒன்றுக்குள் புரண்டு விழுந்ததில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக கவரக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று முற்பல் நடந்த இந்த விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் தம்புள்ளையில் இருந்த அனுராதபுரம் நோக்கி சென்ற போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி கால்வாய்க்குள் விழுந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து கவரக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., ஆனால், கிராமமே எதிர்ப்பு News Lankasri

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri
