குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா எடுத்த முடிவு: ஜனவரி முதல் புதிய திட்டம்- செய்திகளின் தொகுப்பு
அடுத்த வருடம் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில்,
“வெளிநாடுகளில் இருந்து தேவையற்ற கற்கைநெறிகளை கற்பதற்காக அவுஸ்திரேலியா வரும் மாணவர்கள் அவுஸ்திரேலியாவின் கல்வியமைப்பினை தவறாக பயன்படுத்துகிறார்கள்.
தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கும் அவுஸ்திரேலியாவின் தேசிய நலன்களிற்கும் உதவாத கற்கை நெறிகளிற்காக வெளிநாட்டு மாணவர்கள் அவுஸ்திரேலியா வருகின்றனர்.
இது எங்களின் தேசிய நலன்களிற்கும் அவர்களின் நலன்களிற்கும் நன்மையளிக்காத விடயம் இதனால் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.” என்றார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
