சட்ட விரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆப்பு!
சட்டவிரோத கடல் பயணங்களைக் கண்காணிக்க அவுஸ்திரேலிய அரசு இலங்கைக்கு ஐந்து ட்ரோன் விமானங்களை வழங்கியுள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான சட்டவிரோத கடல் பயணங்களைக் கண்காணித்து கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவே இவ்வாறு ட்ரோன் விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியா எதிர்கொண்டுள்ள பெரும் சவாலாக சட்ட விரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில், ஆட்கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளுக்கும் அவுஸ்திரேலியா ட்ரோன் கண்காணிப்பு விமானங்களை வழங்கியுள்ளது.
மிகவும் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடல் பயணங்களை மறைந்திருந்து கண்காணிக்கும் திறன்கொண்ட நவீன ட்ரோன்களே இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

37,000 அடியில் பறந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்: நிர்வாணமாக நடனமாடிய ஊழியரால் பரபரப்பு News Lankasri
