சட்ட விரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆப்பு!
சட்டவிரோத கடல் பயணங்களைக் கண்காணிக்க அவுஸ்திரேலிய அரசு இலங்கைக்கு ஐந்து ட்ரோன் விமானங்களை வழங்கியுள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான சட்டவிரோத கடல் பயணங்களைக் கண்காணித்து கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவே இவ்வாறு ட்ரோன் விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியா எதிர்கொண்டுள்ள பெரும் சவாலாக சட்ட விரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில், ஆட்கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளுக்கும் அவுஸ்திரேலியா ட்ரோன் கண்காணிப்பு விமானங்களை வழங்கியுள்ளது.
மிகவும் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடல் பயணங்களை மறைந்திருந்து கண்காணிக்கும் திறன்கொண்ட நவீன ட்ரோன்களே இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam