அவுஸ்திரேலிய பிரதமருடன் அநுர கலந்துரையாடல்
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான குழுவினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது பல விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய ஆகியோரும் இந்தச் சந்திப்பில் இணைந்து கொண்டனர்.



