கரன்னாகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடும் சட்ட மா அதிபர் திணைக்களம்
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு(Wasantha Karannagoda ) எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை கைவிடுவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட சிலருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இதன் போது குறித்த குற்றச்சாட்டுக்களை முன்னெடுத்துச் செல்லப் போவதில்லை என மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் வழக்கில் 14ம் சந்தேக நபராக வசந்த கரன்னாகொட பெயரிடப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் இந்த கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan