கந்தளாய் தள வைத்தியசாலை உத்தியோகத்தர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் தள வைத்தியசாலைக்கு வைத்திய ஜி.எஸ்.கொஸ்தாவை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களினால் எதிர்ப்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று கந்தளாய் தள வைத்தியசாலை முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது வைத்தியசாலை பணிப்பாளராக தற்போது கடமையாற்றும் சதிஸ்குமாரை நியமிக்குமாறும் கொஸ்தாவை, இடமாற்றுமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் 75 க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன்,திருடன் கொஸ்தாவை இடமாற்று,சதிஸ்குமாரை நியமித்து தா,திருடன் வேண்டாம் போன்ற
வாசகங்களை ஏந்தியவாறு, திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த
விஜேசேகர உட்பட பலரும் கலந்துக்கொண்டு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.