மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்! கொழும்பில் போராட்டம்
மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம் என தெரிவித்து கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்து கொழும்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை சக்திவேல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கத்தோலிக்க ஆயர்கள், பௌத்த பிக்குகள், சிவில் உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம், இனவாதம் வேண்டாம், தமிழ் மற்றும் முஸ்லிம்களின் கூட்டு உரிமைகளைப் பாதுகாக்கவும் எனக் கோரி பதாதைகளை ஏந்தி குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.




பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
