மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்! கொழும்பில் போராட்டம்
மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம் என தெரிவித்து கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்து கொழும்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை சக்திவேல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கத்தோலிக்க ஆயர்கள், பௌத்த பிக்குகள், சிவில் உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம், இனவாதம் வேண்டாம், தமிழ் மற்றும் முஸ்லிம்களின் கூட்டு உரிமைகளைப் பாதுகாக்கவும் எனக் கோரி பதாதைகளை ஏந்தி குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri